கரன்சி வியாபாரத்துக்கும் ஷேர் வியாபாரத்துக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஷேர் வியாபாரம் செய்ய எந்த ஷேரை வாங்குவது என்பதை மட்டும் முடிவு செய்தால் போதும். உதாரணத்துக்கு, 'இன்ஃபோசிஸ்' ஷேரை வாங்கவேண்டும் என்றால் ரூபாயைக் கொடுத்து வாங்கிவிடலாம். இன்ஃபோ சிஸ்-ன் ஃபண்டமென்டல் நிலையை மட்டும் பார்த்து வாங்கினால் போதும். கரன்சி யில் இதையும் தாண்டி இன்னொரு விஷயம் குறித்தும் முடிவெடுக்க வேண்டியதிருக்கும்.
கரன்சி Pair-களாக டிரேட் ஆகிறது. அதாவது, ஒரு கரன்சியை விற்றுத்தான் மற்றொரு கரன்சியை வாங்க வேண்டியிருக்கும். உதாரணமாக, ரூபாயின் மூலமாக டாலரை வாங்க நினைக்கிறோம் என்றால், டாலர் மதிப்பிடப்படும் கரன்சியாகவும் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட உபயோகிக் கப்படும் கரன்சியாகவும் இருக்கும். எனவே ஒரு கரன்சியை வாங்கி லாபம் பார்க்க நினைக்கும் வேளையில், வாங்கும் கரன்சியின் ஃபண்டமென்டல் நிலைமையும், எந்த கரன்சியைக் கொடுத்து வாங்கப் போகிறோமோ அதன் ஃபண்டமென்டல் நிலைமையும் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். அதாவது ரூபாயைக் கொடுத்து டாலரை வாங்குவதாக இருந்தால் டாலர் மற்றும் ரூபாயின் ஃபண்டமெண்டல் நிலைமை நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும். ஏனென்றால், ரூபாயின் ஃபண்ட மென்டல் டாலரை விட ஸ்ட்ராங் காக இருந்தால் டாலரை வாங்கு வதில் பிரயோஜனம் இல்லை. இந்த ஃபண்டமென்டல் நிலைமையைத் தெரிந்துகொள்ள உதவும் ஒரு விஷயம்தான் 'பேலன்ஸ் ஆஃப் பேமென்ட்' என்கிற 'பி.ஓ.பி.'
இந்த 'பி.ஓ.பி.' என்ற வார்த்தை நியூஸ் பேப்பர்கள், ஆர்.பி.ஐ-யின் அறிக்கைகள், நிதியமைச்சகத்தின் அறிக்கைகள், பொருளா தாரம் குறித்த விவாதங்கள் ஆகியவற்றில் அடிக்கடி இடம் பெறுவதைப் பார்த்திருக்கலாம். மிகச் சாதாரணமான ஒரு வார்த்தைதான் இது என்றாலும் கூட, அதுகுறித்து நிறைய பேர் தெளிவில்லாமல்தான் இருக்கிறார் கள். அதற்குக் காரணம் இந்த வார்த் தையை பலர் தவறான அர்த்தத்தில் உபயோகிப்பதுதான்.
கரன்சி வியாபாரம் செய்ய இந்த பி.ஓ.பி. ஸ்டேட்மென்ட் எப்படித் தயாரிக்கப் படுகிறது எனத் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியமில்லை. அது அரசாங்கத்தின் வேலை. ஆனால், பி.ஓ.பி. ஸ்டேட்மென்ட்டின் மூன்று முக்கிய உபயோகத்தினைப் பற்றி அவசியம் தெரிந்துகொண்டே ஆகவேண்டும். அதற்கு முதல்படியாக அந்த ஸ்டேட்மென்ட்டில் என்னென்ன இருக்கும் எனத் தெரிந்துகொள்வது அவசியம்.
பி.ஓ.பி. என்பது ஒரு புள்ளிவிவர அறிக்கை. உதாரணமாக, இந்தியா மற்ற உலக நாடுகளுடன் ஒரு வருடத்தில் செய்த வியாபாரம் மற்றும் கொடுக்கல்-வாங்கல்களை ஒரு டபுள் என்ட்ரி சிஸ்டத்தில் என்டர் செய்து ஸ்டேட்மென்ட் போட்டால் அது கீழ்க்கண்ட விஷயங்களைக் கொண்டிருக்கவேண்டும்.
1) இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி (பொருள் மற்றும் சர்வீஸ்).
2) இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கும், வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கும் நடுவே வங்கிக் கணக்குகளில், ஷேர்களில், பாண்டுகளில், ரியல் எஸ்டேட்டில் செய்யப்பட்ட முதலீடுகள்.
இவற்றைக் கணக்கிட்டுப் பார்த்தால் இந்தியாவுக்கு வெளிநாடுகளிலிருந்து வந்த பணம், வெளிநாடு களுக்கு இந்தியாவில் இருந்து சென்ற பணம், மற்றும் நிகர நிலைமை... அதாவது மொத்தத்தில் ஒரு வருடத்தில் அந்நியச் செலாவணி இந்தியாவுக்கு உள்ளே வந்ததா? இந்தியாவின் கையிலிருந்த செலாவணி கரைந்ததா? அல்லது கையில் செலா வணி இல்லாததால் அந்நியச் செலாவணி கடன் வாங்கி காலந்தள்ள வேண்டியிருந்ததா என்பது தெரிந்துவிடும்.
வெளியே சென்ற கரன்சி அதிகம் என்றால்...
உள்ளே வந்த அந்நிய கரன்சியை விட வெளியே சென்றது அதிகமென்றால், ரூபாய் மதிப்பிழந்திருக் கும். எப்படி? அந்நிய கரன்சி அதிகமாக வெளியே செல்லும்போது ரூபாய் விற்கப்பட்டு அந்நிய கரன்சி வாங்கப்பட்டிருக்கும். அப்போது அதிகமாக வாங்கப்படும் அந்நிய கரன்சியின் மதிப்பு கூடியிருக்கும். அதிகமாக விற்கப்படும் ரூபாயின் மதிப்பு குறைந்திருக்கும்.
உள்ளே வந்த கரன்சி அதிகம் என்றால்...
அந்நிய கரன்சி வெளியே சென்றதை விட, உள்ளே வந்தது அதிகமென்றால் ரூபாயின் மதிப்பு கூடியிருக்கும். எப்படி? அந்நிய கரன்சி அதிகமாக உள்ளே வரும்போது அந்த கரன்சி விற்கப்பட்டு ரூபாய் வாங்கப்பட்டிருக்கும். அப்போது அதிகமாக வாங்கப்படும் ரூபாயின் மதிப்பு கூடியிருக்கும்.
பி.ஓ.பி. ஸ்டேட்மென்ட்டில் எவையெல்லாம் இருக்கும்?
ஒரு நாட்டின் பி.ஓ.பி. ஸ்டேட்மென்ட்டில் ஒரு வருடத்தில் அது மற்ற நாடுகளுடன் செய்த வியாபாரம் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் மூன்று விதமாக குரூப் செய்யப்பட்டிருக்கும்.
a. கரன்ட் அக்கவுன்ட்: உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சர்வீஸ்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பு, வட்டி, டிவிடெண்ட், தானம் (Aid) கொடுத்தது/பெற்றது.
b. கேப்பிட்டல் அக்கவுன்ட்: டைரக்ட் இன்வெஸ்ட்மென்ட் (எஃப்.டி.ஐ.), போர்ட் ஃபோலியோ இன்வெஸ்ட்மென்ட் (எஃப்.ஐ.ஐ.), இரண்டு நாடுகளில் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாக வாங்க மற்றும் விற்கப்பட்ட உற்பத்தி செய்யப்படாத விஷயங்கள் (பொதுவாக ஃபை னான்ஸியல் அசெட்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட்), வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட/டெபாசிட்டாக வைக்கப்பட்ட தொகைகள், ஷேர்கள், பாண்டுகள், ரியல் எஸ்டேட்.
c. அஃபிஷியல் ரிசர்வ் அக்கவுன்ட்: வாங்கிய அல்லது விற்ற சில ரிசர்வ் அஸெட்கள். உதாரணமாக டாலர், ஃபாரின் எக்ஸ்சேஞ்ச், தங்கம், ஸ்பெஷல் டிராயிங் உரிமைகள் போன்றவை.
அஃபிஷியல் ரிசர்வ் என்பது ஒரு நாட்டின் சென்ட்ரல் பேங்க் (ஆர்.பி.ஐ.) தன் கையில் வைத் திருக்கும் டாலர், தங்கம் மற்றும் ஸ்பெஷல் டிராயிங் உரிமைகள் போன்றவைகள்.
ஒரு நாட்டின் (கரன்ட் அக்கவுன்ட்) ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிலைமைதான் கரன்சியின் மதிப்பை உடனடியாகப் பாதிக்கும் விஷயம். ஏற்றுமதியை விட மிக அதிகமாக இறக்குமதி செய்யும் நாட்டின் கரன்சி மதிப்பிழக்கும். ஏற்றுமதி/இறக்குமதி கரன்ட் அக்கவுன்ட்டின் கீழ் வருகிறது. எனவே, கரன்ட் அக்கவுன்ட்டில் துண்டு (டெஃபிசிட்) பெரிதாக விழுந்தால் கரன்சியின் மதிப்பு குறையும்.
அதாவது, இந்தியா அதிகமாக இறக்குமதி செய்யும் போது கம்பெனிகள் ரூபாயை விற்று டாலரை வாங்குவார்கள். ரூபாய் மதிப்பிழக்கும். அப்படி மதிப்பிழக்கும் பட்சத்தில் இறக்குமதி செய்யப்படும் சரக்கின் விலையும் கூடும். எனவே ரூபாயின் மதிப்பை ஸ்டெபிலைஸ் செய்ய ஆர்.பி.ஐ. கையில் இருக்கும் (அஃபிஷியல் ரிசர்விலிருந்து) டாலரை விற்கும். ஆர்.பி.ஐ-யின் இந்த நடவடிக்கையால் அதன் அஃபிஷியல் ரிசர்வ் குறையும். அதே நேரத்தில் ரூபாயின் மதிப்பு கூடும். தொடர்ந்து இறக்குமதி அதிகமாகவேயிருந்து, ஆர்.பி.ஐ. கையில் இருக்கும் ரிசர்வ் எல்லாம் காலியாகிவிட்டால், ஆர்.பி.ஐ. வெளிநாட்டிலிருந்து டாலரைக் கடன் வாங்க வேண்டியிருக்கும். ஏனெனில், கையில் டாலரில்லாமல் ஆர்.பி.ஐ. இருந்தால், டாலர் மதிப்பை நாட்டு நலனுக்கேற்ப ஆர்.பி.ஐ-யால் மேனேஜ் செய்யமுடியாது.
அதேபோல் பி.ஓ.பி. மிகவும் பாசிட்டிவ் ஆகி, ரூபாயின் மதிப்பு கூடிக்கொண்டே போனால், ஏற்றுமதியாளர்கள் தொழில் நடத்த முடியவில்லை எனக்கூக்குரலிடுவார்கள்... (டாலர் மதிப்பு 2007-ல் ரூபாய் 38 ஆனபோது அவர்கள் தவித்தது போல). அப்போது ஆர்.பி.ஐ. மார்க்கெட்டில் சென்று டாலர்களை வாங்கி அதன் மதிப்பைக் கூட்டி ரூபாயின் மதிப்பைக் குறைக்கும் முயற்சியில் இறங்கும். அதுபோன்ற சூழ்நிலையில் அஃபிஷியல் ரிசர்வின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
பி.ஓ.பி. ஸ்டேட்மென்ட்டின் மூன்று உபயோகங்கள்:
1. ஒருநாட்டின் கரன்சிக்கு ஃபாரெக்ஸ் மார்க்கெட்டில் டிமாண்ட் அதிகமிருக்குமா, அல்லது சப்ளை அதிகமாக இருக்குமா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
உதாரணமாக, இந்தியா ஒரு வருடத்தில் 1,000 டாலருக்கு இறக்குமதியும் 100 டாலருக்கு ஏற்றுமதியும் செய்கிறது என்று வைத்துக்கொள்வோம்... கரன்சி சந்தையில் ரூபாயின் நிலை என்னவாகும்? இறக்குமதி மதிப்பில் ($1,000) இருந்து ஏற்றுமதி மதிப்பினைக் ($100) கழித்துவிட்டால் மீதி 900 டாலர்களை இந்தியா அமெரிக்காவுக்குக் கொடுக்கவேண்டும். இந்த 900 டாலர்களை கரன்சி மார்க்கெட்டில் வாங்க இந்திய இறக்குமதியாளர்கள் ரூபாயை விற்று அந்த 900 டாலர்களை வாங்கவேண்டும். அதிகமாக விற்கப்படும் ரூபாய் மதிப்பிழக்கும். வாங்கப்படும் டாலர் மதிப்பு கூடும். உதாரணமாக, 1 டாலரின் மதிப்பு 38 ரூபாயிலிருந்து 45-ரூபாய்க்குப் போனால் டாலரின் மதிப்பு கூடுகிறது; ரூபாயின் மதிப்பு குறைகிறது.
2. ஒரு நாட்டுடன் மற்ற நாடுகள் நல்ல தரமான மற்றும் தடையற்ற பிஸினஸைத் தொடர வாய்ப்புள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
ஒரு நாட்டின் ஏற்றுமதியை விட, இறக்குமதி மிக அதிகமாக இருக்கும்பட்சத்தில் அந்த நாட்டின் பி.ஓ.பி. பொசிஷன் மிக மோசமாகிவிடும். எனவே அந்த நாட்டின் அரசு இறக்குமதிக்கு டிரேட் பேரியர்ஸ்/ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் (கஸ்டம்ஸ் டூட்டி அதிகரித்தல்/ அட்வலோரம் டூட்டி/டம்ப்பிங் டூட்டி போன்றவை) கொண்டுவரலாம். இதுபோன்ற கட்டுப்பாடுகளைக் கொண்டுவரும்போது அந்த நாடு எந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறதோ, அந்த நாடும் தங்களது இறக்குமதிக்கு இதேபோன்ற கட்டுப்பாடுகளைக் கொண்டுவரக்கூடும். அப்படிச் செய்தால் நடந்துகொண்டிருக்கும் கொஞ்ச நஞ்ச ஏற்றுமதியும் குறைந்துவிடலாம். அதானால் கரன்சி மேலும் மதிப்பிழக்கலாம்.
3. ஒரு நாடு எந்த அளவுக்கு தொழில் ரீதியான திறமை மற்றும் வல்லமை படைத்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
மிகவும் மோசமான பி.ஓ.பி. பொசிஷனைவைத்தே அந்த நாட்டின் டொமஸ்ட்டிக் இண்டஸ்ட்ரீஸ் உலக மார்க்கெட்டில் போட்டி போடத் தகுதியற்றவையாக இருக்கிறது எனக் கண்டுபிடித்துவிடலாம். அதைக்கொண்டு அந்த நாட்டு கரன்சியின் மதிப்பு பெரிய அளவில் கூடாது என்பதை அறியலாம்.
அடுத்த இதழில் கரன்சி டிரேடிங்குக்கும் ஸ்டாக் மார்க்கெட்டுக்கும் உள்ள மற்றுமொரு பெரிய வித்தியாசம் என்ன எனப் பார்ப்போம்.